பல்லகவுண்டன்பாளையம்- எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயிலுக்கு மார்கழி மாதம் ஆண்டுவிழா நடத்துப்படும். கிராமத்துக் கோயில் என்பதால் பண்டாரம் தான் பூஜை பராமறிப்பு எல்லாம். ஆண்டுவிழா அன்று மட்டும் சென்னிமலை முருகன் கோயிலில் இருந்து ஐயமார்கள் வந்து மந்திரம் ஓதி அபிசேகம் செய்து கோயில் முழுவதும் பூக்களால் அழங்கரித்து அம்மனுக்கு சிறப்பான அழங்காரம் செய்வார்கள். கோயில் பிரமாண்டமாக இருக்கும். ஏழு எட்டு பட்டிகளில் இருந்து மக்கள் வருவார்கள். ஊருக்குள் வரும் ஒரே ஒரு அரசு பேருந்து அன்று மட்டும் வராது. ஐயமார்களோடு சென்னிமலையில் இருந்து 20 பேரும் அம்மன் தரிசனம் காண வருவார்கள். இவர்கள் எல்லாம் சுப்பு’சாமி’ என்று ஒருவர் தன் தலைமையில் அழைத்து வருவார். அன்று இரவு அம்மன் அபிசேகம் மாலை இவரோட செலவு. தீவிரமான முருகர் பக்தர். எவ்வளவு தீவிரம் என்றால் , அவர் வீட்டுக்கு பூட்டு கிடையாது. வீட்டின் பூஜை அறையில் எல்லா பணக்கட்டுகளும் ஒரு தட்டில் வ...
(it was written last year August 2021!) எனக்கு tomboy வார்த்தையில் உடன்பாடில்லை.உங்கள் புரிதலுக்காக பயன் படுத்த வேண்டிய சூழ்நிலை. சமீபத்தில் வெளிவந்த ”திட்டம் இரண்டு” படம், இந்தப் பதிவினை எழுத வைத்திருக்கிறது. என் வாழ்க்கை அனுபவத்தோடு சேர்த்து இதில் பேசியிருக்கிறேன். மனிதனின் உடல் வெளி உருப்பு வைத்துதான் திரு நங்கை,திரு நம்பி,பெண்,ஆண், என்று சொல்லப்பட வேண்டுமே தவிற, உடல் அசைவுகள், நடந்து கொள்ளும் விதம் என்று வைத்து பாலினத்தை குறிப்பிடக்கூடாது.அப்படி குறிப்பிடுவது தவறு. நான் tomboy type என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் எப்படி நடக்கிறேன் என்றெல்லாம் யாரும் எனது பள்ளி நாட்களில் நண்பர்கள் சொன்னதில்லை.இன்று வரை பள்ளி நண்பர்கள் இதை பற்றியெல்லாம் என்னிடம் பேசியதுமில்லை. எனது வீட்டிலும் இன்று வரை ,எனது நடை,உடல் அசைவு பற்றியெல்லாம் யாரும் பேசியதில்லை. நான் கிராமத்துப் பெண்,முது...
( DISCLAIMER: என் அனுபவத்தில் தெரிந்ததை எழுதியிருக்கிறேன்,யார் மனதையும் புன்படுத்தினால்,உங்கள் நம்பிக்கையை, நீங்களாக கைவிட்டால் மட்டுமே போகுமே தவிற,மற்றவர் சொல்வதனால் நம்பிக்கை போய்விடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.) நம்பிக்கை என்று எல்லோருக்கும் உண்டு.பொதுவாக கடவுள் மேல் வைக்கப்படும் நம்பிக்கை மட்டும் தான் நம்பிக்கையாக பார்க்கப் படுகிறது. கடவுள் நம்பிக்கை உடையவர்களை DEISTS என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இவர்கள் தனக்கு பிடித்த ஒரு கடவுளை தேர்ந்தெடுத்து,அந்தக் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை நடத்துவார்கள். கடவுள் என்று எதுவும் இல்லை என்பவர்களை நம்பிக்கை என்றே ஒன்றும் இல்லாதவர்களாக பார்க்கப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை ATHEISTS என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.இவர்களுக்கும் நம்பிக்கை உண்டு,அறிவியலை நம்புவார்கள். இவர்கள் கடவுளை நம்புகிறவர்களை ,மூட நம்பிக்கை உள்ளவர்கள் என்று சொல்வது உண்டு. ATHEISTS இல், சிலர் அறிவியல் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்,சிலருக்கு கடவுள் நம்புவதற்கு ஆதாரம் இருக்காததால் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள்...
Comments
Post a Comment