பல்லகவுண்டன்பாளையம்- எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயிலுக்கு மார்கழி மாதம் ஆண்டுவிழா நடத்துப்படும். கிராமத்துக் கோயில் என்பதால் பண்டாரம் தான் பூஜை பராமறிப்பு எல்லாம். ஆண்டுவிழா அன்று மட்டும் சென்னிமலை முருகன் கோயிலில் இருந்து ஐயமார்கள் வந்து மந்திரம் ஓதி அபிசேகம் செய்து கோயில் முழுவதும் பூக்களால் அழங்கரித்து அம்மனுக்கு சிறப்பான அழங்காரம் செய்வார்கள். கோயில் பிரமாண்டமாக இருக்கும். ஏழு எட்டு பட்டிகளில் இருந்து மக்கள் வருவார்கள். ஊருக்குள் வரும் ஒரே ஒரு அரசு பேருந்து அன்று மட்டும் வராது. ஐயமார்களோடு சென்னிமலையில் இருந்து 20 பேரும் அம்மன் தரிசனம் காண வருவார்கள். இவர்கள் எல்லாம் சுப்பு’சாமி’ என்று ஒருவர் தன் தலைமையில் அழைத்து வருவார். அன்று இரவு அம்மன் அபிசேகம் மாலை இவரோட செலவு. தீவிரமான முருகர் பக்தர். எவ்வளவு தீவிரம் என்றால் , அவர் வீட்டுக்கு பூட்டு கிடையாது. வீட்டின் பூஜை அறையில் எல்லா பணக்கட்டுகளும் ஒரு தட்டில் வ...
(it was written last year August 2021!) எனக்கு tomboy வார்த்தையில் உடன்பாடில்லை.உங்கள் புரிதலுக்காக பயன் படுத்த வேண்டிய சூழ்நிலை. சமீபத்தில் வெளிவந்த ”திட்டம் இரண்டு” படம், இந்தப் பதிவினை எழுத வைத்திருக்கிறது. என் வாழ்க்கை அனுபவத்தோடு சேர்த்து இதில் பேசியிருக்கிறேன். மனிதனின் உடல் வெளி உருப்பு வைத்துதான் திரு நங்கை,திரு நம்பி,பெண்,ஆண், என்று சொல்லப்பட வேண்டுமே தவிற, உடல் அசைவுகள், நடந்து கொள்ளும் விதம் என்று வைத்து பாலினத்தை குறிப்பிடக்கூடாது.அப்படி குறிப்பிடுவது தவறு. நான் tomboy type என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் எப்படி நடக்கிறேன் என்றெல்லாம் யாரும் எனது பள்ளி நாட்களில் நண்பர்கள் சொன்னதில்லை.இன்று வரை பள்ளி நண்பர்கள் இதை பற்றியெல்லாம் என்னிடம் பேசியதுமில்லை. எனது வீட்டிலும் இன்று வரை ,எனது நடை,உடல் அசைவு பற்றியெல்லாம் யாரும் பேசியதில்லை. நான் கிராமத்துப் பெண்,முது...
2019 தை மாதம், பல்லகவுண்டன் பாளையம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடை பெறுவதற்கு எல்லாம் தயாராக இருந்தது. ஒரு காட்டில் ஜல்லிக்கட்டிற்கு ஏற்றவாறு விளையாட்டுக் களமும் ,பார்வயாளர்களுக்கு பாதுகாப்பாகவும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. சுத்தியுள்ள 12 பட்டியில் இருந்து,காலை களை அடக்கி பரிசுகளை வாங்கிச் செல்ல ஆண்களும், தான் வளர்த்த காளைகளை அழைத்துக் கொண்டு சில பெண்களும் ஆண்களும் குடும்பமாக வந்திருந்தனர். வாடிவாசலில் இருந்து சில தூரத்திற்கு தடுப்பு வைக்கப்பட்டு,வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 40 காளைகள் நின்று கொண்டு இருந்தது. முதல் காளை விடும் மரியாதை, ஊர் தலைவருக்கு கொடுக்கப்பட்டது.அவரது காளை “கருப்பன்” ,வெள்ளை நிறத்தோல், தேங்காய் சீவும் கத்தி போல் கூர்மையான கொம்பு இருக்கும். கொம்பு,மதில் ,கால்களில் மஞ்சள் பூசப்பட்டிருந்ததால் ஆள் பார்க்க சாதாரணமாக தெரிந்தாலும், சூடான மூச்சை சாதாரணமாக விட்டுக் கொண்டு எல்லாரையும் மோதுவதற்கு ,முட்ட கண்ணோடு கோவமாக பார்த்துக் கொண்டு காத்திருந்தான். கருப்பன் களத்துக்குள் இறக்கப் பட்டான். “ நம்ம ஊர் தலைவரின் காளை கருப்பன்… ய்ப்பா..என...
Comments
Post a Comment