Posts

Showing posts from November, 2020

அன்பே சிவம் VS THEISM !

Image
 ( DISCLAIMER: என் அனுபவத்தில் தெரிந்ததை எழுதியிருக்கிறேன்,யார் மனதையும் புன்படுத்தினால்,உங்கள் நம்பிக்கையை, நீங்களாக கைவிட்டால் மட்டுமே போகுமே தவிற,மற்றவர் சொல்வதனால் நம்பிக்கை போய்விடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.) நம்பிக்கை என்று எல்லோருக்கும் உண்டு.பொதுவாக கடவுள் மேல் வைக்கப்படும் நம்பிக்கை மட்டும் தான் நம்பிக்கையாக பார்க்கப் படுகிறது. கடவுள் நம்பிக்கை உடையவர்களை DEISTS   என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இவர்கள் தனக்கு பிடித்த ஒரு கடவுளை தேர்ந்தெடுத்து,அந்தக் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை நடத்துவார்கள். கடவுள் என்று எதுவும் இல்லை என்பவர்களை நம்பிக்கை என்றே ஒன்றும் இல்லாதவர்களாக பார்க்கப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை  ATHEISTS  என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.இவர்களுக்கும் நம்பிக்கை உண்டு,அறிவியலை நம்புவார்கள். இவர்கள் கடவுளை நம்புகிறவர்களை ,மூட நம்பிக்கை உள்ளவர்கள் என்று சொல்வது உண்டு. ATHEISTS இல்,   சிலர் அறிவியல் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்,சிலருக்கு கடவுள் நம்புவதற்கு ஆதாரம் இருக்காததால் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள். சிலருக்கு தன் வாழ்க்கை

Let me tell you a குட்டி story !

Image
காலை ஏழு மணி, “வண்டி எண்:1410,சென்னை to   ஈரோடு செல்ல இருக்கும்..” ஒளியெழுப்பிக்கொண்டிருந்த இரயில் நிலையத்தில், “10 நிமிடம் வண்டி லேட்”என்றான் இராமு, யாரென்று தெரியாமலே தலையாட்டிக் கொண்டு தனது கைப்பேசியை திறந்தான் சிவா. “சாயா சாயா சாயா”இடித்துவிட்டுச் சென்றவனை   பார்த்துக் கொண்டு நின்றான் வாசு, கொட்டாவியோடு பறந்த ஆவி தேநீரை பருகிக்கொண்டிருந்த வண்ணம் போர்ட்டர்கள், இவர்களுக்கு ஓரத்தில் ஒருவன் போர்வையை தலை வரை போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தான். தடம் பாய்ந்து கொண்டு ரயில் பெட்டிகள் வந்தது. உறங்கிகொண்டிருந்தவனின் கனவு பெட்டிச் சத்தத்தில், அப்படியே களைந்தது.படுத்திருந்தவாறு எல்லாரும் வண்டி ஏறுவதை பார்த்துக் கொண்டிருந்தான். வண்டி 5 நிமிடம் தான் நிற்கும் என்பதால்,எல்லோரும் தடபுடலாக ஓடி ஏறினார்கள். அப்புறமென்ன,வண்டி கிளம்பியவுடன்,மீண்டும் அவன் உறங்கச் சென்றான். வாழ்க்கை அவ்வள்வுதான்,   கதையும் அவ்வளவுதான். எல்லாரும் வேலையைப் போய் பாருங்கள் அல்லது உறங்கச் செல்லுங்கள். -ரோகிணி                             

சாகாவரம் in “THE GOOD PLACE”!

Image
  ’ THE GOOD PLACE ’ என்பது சொர்க்கத்தை குறிப்பிடுகிறது.   நல்லவர்கள் எல்லாம் சொர்க்கத்திற்கும் ,தீயவர்கள் எல்லாம் நரகத்திற்கும் செல்வார்கள் என்பது உண்மையா இல்லையா   தெரியாது,ஆனாலும் நாம் நம்புகிறோம். மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறக்கப்படும் நாளன்று,எவர்களின் உயிர் இம்மன்னைவிட்டு பிரிகிறதோ,அவ்வுயிர்கள் எல்லாம் சொர்க்கத்திற்குத்தான் செல்கிறது என்பது மற்றொரு நம்பிக்கை. சரி,நாம் இறந்தபின்பு நரகத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறோம் என்றால்,அங்கு நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றவாறு,   நம்மை எண்ணெய் சட்டியில் வதட்டுவதோ, நம் தலையை பந்தாடுவதோ, நம் மீது பூச்சிகளை வீசுப்படுவதோ,எதுவாக இருப்பினும் அனுபவிப்போம். அதுவே, நாம் இறந்தபின்பு சொர்க்கத்திற்குச் சென்று விட்டால்,எந்தவித தண்டனைகளும் இருக்காது,   நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்,நாமும் விருப்பத்திற்கு ஏற்றவாரு   மகிழ்ச்சியாக இருப்போம். இது கிட்டத்தட்ட   நாம் கேட்கும் வரம் போல தான். அதாவது நாம் சாமியிடம் ‘அது வேண்டும் இது வேண்டும்’ என்றுதானே வேண்டுகிறோம்.அதுவெல்லாம் நமக்கு சொர்க்கத்தில் கிடைக்கும். சரி, நமக்கு வேண்டியதெல்லாம் முடிவே இல்லாமல் கி

HAPPY INTERNATIONAL MEN'S DAY- ’மாறா’வைப் போற்றுவோம்!

Image
  படம் :சூரரைப் போற்று. “எனக்கு சமைக்க வீட்டுவேலைலாம் அத்துப்புடி தான்,ஆனா செய்யமாட்டேன்,எனக்கு என் பேக்கரி business தான் முக்கியம்” இப்படி நிஜவாழ்க்கையில் சொல்லும் பெண்களுக்கு ’திமிர் பிடித்தவள்’ என்னும் பெயர் உண்டு.தனக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்   இன்னும் பெண்களிடம் கொடுக்கவில்லை,காரணம் பெண்கள் தவறாகத்தான் தேர்ந்தெடுப்பார்கள்   என்ற  எண்ணம்.  காலம் காலமாக தமிழ் சினிமாவிலும், உழைப்பாளி முதல் Mr.local ,ஆண் தேவதை படம் வரை ,வீட்டு வேலைகளைத் தவிர தனக்கு பிடித்த வேலைகளில் ஈடுபாடு உள்ள பெண்களை வில்லிகளாகத்தான் சித்திரைக்கப்பட்டுள்ளார்கள். இப்படி வந்த படங்களையெல்லாம் hit   ஆக்கிவிட்டு,திடீரென்று பொம்மி யை மட்டும் போற்றுவது,பொம்மியை பொம்மயாக பார்த்ததால் தானோ ? படம் :சூரரைப் போற்று. இங்க எல்லாரும் புரிஞ்சிக்க வேண்டியது மாறா கதாப்பாத்திரத்தை தான்.பொம்மி யின் கனவுக்கும், அவளோட வாழ்க்கைக்கும் மதிப்பு கொடுத்து அதுக்கான space கொடுத்த மாறா தான் ஷ்பெசல்.  பொம்மி போன்ற பெண்கள் ஏராளமாக உள்ளார்கள்,’மாறா’ போன்ற ஆண் கணவராக கிடைக்காததால் அமைதியாக இருக்கிறார்களே தவிர ,எல்லா பெண்களும் கிட்டத்