Posts

Showing posts with the label rohini

Let me tell you a குட்டி story !

Image
காலை ஏழு மணி, “வண்டி எண்:1410,சென்னை to   ஈரோடு செல்ல இருக்கும்..” ஒளியெழுப்பிக்கொண்டிருந்த இரயில் நிலையத்தில், “10 நிமிடம் வண்டி லேட்”என்றான் இராமு, யாரென்று தெரியாமலே தலையாட்டிக் கொண்டு தனது கைப்பேசியை திறந்தான் சிவா. “சாயா சாயா சாயா”இடித்துவிட்டுச் சென்றவனை   பார்த்துக் கொண்டு நின்றான் வாசு, கொட்டாவியோடு பறந்த ஆவி தேநீரை பருகிக்கொண்டிருந்த வண்ணம் போர்ட்டர்கள், இவர்களுக்கு ஓரத்தில் ஒருவன் போர்வையை தலை வரை போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தான். தடம் பாய்ந்து கொண்டு ரயில் பெட்டிகள் வந்தது. உறங்கிகொண்டிருந்தவனின் கனவு பெட்டிச் சத்தத்தில், அப்படியே களைந்தது.படுத்திருந்தவாறு எல்லாரும் வண்டி ஏறுவதை பார்த்துக் கொண்டிருந்தான். வண்டி 5 நிமிடம் தான் நிற்கும் என்பதால்,எல்லோரும் தடபுடலாக ஓடி ஏறினார்கள். அப்புறமென்ன,வண்டி கிளம்பியவுடன்,மீண்டும் அவன் உறங்கச் சென்றான். வாழ்க்கை அவ்வள்வுதான்,   கதையும் அவ்வளவுதான். எல்லாரும் வேலையைப் போய் பாருங்கள் அல்லது உறங்கச் செல்லுங்கள். -ரோகிணி              ...

HAPPY INTERNATIONAL MEN'S DAY- ’மாறா’வைப் போற்றுவோம்!

Image
  படம் :சூரரைப் போற்று. “எனக்கு சமைக்க வீட்டுவேலைலாம் அத்துப்புடி தான்,ஆனா செய்யமாட்டேன்,எனக்கு என் பேக்கரி business தான் முக்கியம்” இப்படி நிஜவாழ்க்கையில் சொல்லும் பெண்களுக்கு ’திமிர் பிடித்தவள்’ என்னும் பெயர் உண்டு.தனக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்   இன்னும் பெண்களிடம் கொடுக்கவில்லை,காரணம் பெண்கள் தவறாகத்தான் தேர்ந்தெடுப்பார்கள்   என்ற  எண்ணம்.  காலம் காலமாக தமிழ் சினிமாவிலும், உழைப்பாளி முதல் Mr.local ,ஆண் தேவதை படம் வரை ,வீட்டு வேலைகளைத் தவிர தனக்கு பிடித்த வேலைகளில் ஈடுபாடு உள்ள பெண்களை வில்லிகளாகத்தான் சித்திரைக்கப்பட்டுள்ளார்கள். இப்படி வந்த படங்களையெல்லாம் hit   ஆக்கிவிட்டு,திடீரென்று பொம்மி யை மட்டும் போற்றுவது,பொம்மியை பொம்மயாக பார்த்ததால் தானோ ? படம் :சூரரைப் போற்று. இங்க எல்லாரும் புரிஞ்சிக்க வேண்டியது மாறா கதாப்பாத்திரத்தை தான்.பொம்மி யின் கனவுக்கும், அவளோட வாழ்க்கைக்கும் மதிப்பு கொடுத்து அதுக்கான space கொடுத்த மாறா தான் ஷ்பெசல்.  பொம்மி போன்ற பெண்கள் ஏராளமாக உள்ளார்கள்,’மாறா’ போன்ற ஆண் கணவராக கிடைக்காததால் அமைதியாக இருக்கிறார...